வென்கடே மைதானமும் இந்திய இலங்கை அணிகளும் (சிறப்புக் கண்ணோட்டம்)
உலக
விளையாட்டு ரசிகர்களின் கவனத்தை கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தனது
ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின்
நிறைவு நாளும் நெருங்கிவிட்டது. ஆம்! 10 ஆவது உலகக் கிண்ணக் கிரிக்கெட்
தொடரின் இறுதிப் போட்டி மும்பை வென்;கடே மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.
இதில் அடுத்த 4 வருடங்களுக்கு தாங்களே கிரிக்கெட்டின் ராஜாக்கள் என
மார்தட்டிக் கொள்வதற்காக இலங்கையும் இந்தியாவும் பலப்பரீட்சை
நடத்தவுள்ளன.
36 வருட வரலாற்றைக் கொண்ட உலகக் கிண்ணக்
கிரிக்கெட்டில் இரண்டு ஆசிய அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் முதல்
சந்தர்ப்பம் இதுவாகும். இதற்கமைய மேற்கத்தைய நாடுகளின் மகத்துவமிக்க
விளையாட்டாகத் திகழ்ந்த கிரிக்கெட் ஆசியாவின் ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ளது
என்றால் மிகையாகாது. கிரிக்கெட்டை அறிமுகப்படுத்திய இங்கிலாந்துக்கும்
அதனை ஆண்டாண்டு காலம் ஆண்டுவந்த அவுஸ்திரேலியாவுக்கும் இம்முறை அரை இறுதிப்
போட்டிவரைகூட இடமில்லை என்பதுதான் இங்கு சுவாரஸ்யமான விடயம்.
1992ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை ஒரு வெளிநாட்டு அணியுடன் ஆசிய அணி இறுதிப் போட்டிக்கு
தகுதிபெற்றமைதான் கடந்த உலக் கிண்ணத் தொடர் வரையான வரலாறாக இருந்தது.
இம்முறை அந்த வரலாறு மாற்றியமைக்கப்பட்டு நான்கில் மூன்று ஆசிய அணிகளான
இந்தியாஇ பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியன அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
அதிலிருந்து இந்தியாவும் இலங்கையும் தற்போது இறுதிப் போட்டியில் விளையாடும்
வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
இலங்கைக்கே வெற்றிக் கிண்ணம் என்பது
இலங்கை ரசிகர்களின் நம்பிக்கையாகவும் இந்தியாவுக்கே வெற்றிக் கிண்ணம்
என்பது இந்திய ரசிகர்களின் கருத்தாகவுமே தற்போதுள்ளது. எனினும். உண்மையில்
எவ்வணி வெற்றிபெறும் என்பதுதான் அனைவர் மத்தியிலும் எழுந்துள்ள ஒரே
கேள்வியாகும்.
இந்திய மற்றும் இலங்கை அணிகள் 1979ஆம் ஆண்டு முதல்
2010ஆம் ஆண்டு வரை 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன. அவற்றில்
இந்தியா 67 வெற்றிகளையும்இ இலங்கை 50 வெற்றிகளையும் பெற்றுள்ளன. எஞ்சிய 11
போட்டிகளும் முடிவின்றி கைவிடப்பட்டுள்ளன.
இலங்கைக்கு எதிராக
இந்தியா அதிக பட்சமாக 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 414 ஓட்டங்களை
2009ஆம் ஆண்டு ராஜ்கோட்டில் குவித்துள்ளது. இது இந்திய அணி சர்வதேச ஒருநாள்
போட்டிகளில் பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இந்தப் போட்டியில்
பதிலளித்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 411
ஓட்டங்களைப் பெற்றது. இதுவே இந்தியாவுக்கு எதிராக இலங்கை பெற்ற அதிகபட்ச
ஓட்டங்களாகும்.
2000 ஆம் ஆண்டு சார்ஜாவில் வைத்து 26.3 ஓவர்களில்
54 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தமைதான் இலங்கைக்கு எதிராகப்
பெற்ற குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை. இலங்கை அணி ஆகக்குறைவாக 1984ஆம் ஆண்டு
சார்ஜாவில் 41 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும்
இழந்துள்ளது.
1987ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 41 ஓவர்களில் 4
விக்கெட் இழப்புக்கு 299 ஓட்டங்களைக் குவித்ததே மும்பை வென்;கடே
மைதானத்தில் இந்தியா பெற்ற அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும். இதுவரை இந்த
மைதானத்தில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 வெற்றிகளையும் 6
தோல்விகளையும் பெற்றுள்ளது. அவற்றில் இலங்கையை இரண்டு தடவைகள் எதிர்கொண்டு
அதில் ஒரு வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.
1987ஆம்
ஆண்டு இந்தியா பெற்ற 299 ஓட்டங்களுக்கு பதிலளித்தாடி 40 ஓவர்களில் 7
விக்கெட் இழப்புக்கு 289 ஓட்டங்களைப் பெற்றதே வென்;கடே மைதானத்தில் இலங்கை
பெற்ற அதிகபட்ச ஓட்டங்களாகும். இது இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டி
என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும். இந்த மைதானத்தில் இந்தியாவைத்
தவிர்த்து மேலும் 2 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அவற்றில் ஒரு
வெற்றியையும்இ ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது.
இம்முறை உலகக்
கிண்ணக் கிரிக்கெட் தொடரில் கனடாவுக்கு எதிராக கடந்த மார்ச் 13ஆம் திகதி
நிய+ஸிலாந்து பெற்ற 358 ஓட்டங்களே மும்பை வென்;கடே மைதானத்தில் ஓர் அணி
பெற்ற ஆகக்கூடிய ஓட்ட எண்ணிக்கையாகும். 1998ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக
பங்களாதே~; அணி 36.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 115
ஓட்டங்களைப் பெற்றதே இம்மைதானத்தின் குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கையாகும்.
இந்த
வரலாற்றையும் மைதானத்தில் ரசிகர்களின் ஆதரவையும் பொறுத்தமட்டில்
இந்தியாவுக்கு 55 வீத வாய்ப்பும்இ இலங்கைக்கு 45 வீத வாய்ப்பும் உள்ளன.
எனினும்இ இது வரலாற்றின் வெறும் கணிப்பே தவிர அண்மைக்கால போட்டிகளின்
நிலையல்ல. அந்த வகையில் இரண்டு அணிகளும் இறுதி வரை வெற்றிக்காக கடுமையாகப்
போராட வேண்டி இருக்கும் என்பதோடு இலங்கை அணியின் ஆதிக்கம் மேலோங்கவும் அதிக
வாய்ப்புள்ளது.
ஏனெனில்இ இறுதிப் போட்டிகளில் இந்திய வீரர்கள்
அவ்வப்போது பிரகாசிக்கத் தவறுகின்றமை வரலாறாகும். அதுவும் இலங்கையுடனான
வேறு பல இறுதிப் போட்டிகளில் இந்தியா கிண்ணத்தை கோட்டை விட்ட வரலாறும்
இருக்கவே செய்கின்றது. ஆகவேஇ இறுதிப் போட்டியில் இந்தியாவுக்குத்தான்
வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது எனக் கூறுவதில் அர்த்தமில்லை.
இரண்டு
அணிகளுக்குமே சம அளவான வாய்ப்புகள் இருக்கின்றன. போட்டியன்று யார்
சிறப்;பாகவும் சரியான தருணத்தில் நூறு வீதம் சிறப்பாகவும்
செயற்படுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் எனலாம். இதுவே முன்னாள்
ஜாம்பவான்களான மேற்கிந்தியத் தீவுகளின் கிளைவ் லொய்ட்இ இந்தியாவின் கபில்
தேவ்இ பாகிஸ்தானின் இம்ரான் கான்இ இலங்கையின் அர்ஜுன ரணதுங்கஇ
அவுஸ்திரேலியாவின் ஸ்டீவ் வோ ஆகியோர் ஒருமித்துக் கூறும் கருத்தாகும்.
இவர்கள் அனைவருமே தாங்கள் அணித்தலைவராக இருந்த காலப்பகுதியில் தமது அணிக்கு
உலக சாம்பியன் மகுடத்தை ஈட்டிக்கொடுத்தவர்கள் என்பதுதான் சிறப்பம்சம்.
எவ்வாறாயினும்இ
லீக் சுற்றில் தனது கடைசிப் போட்டியான நிய+ஸிலாந்துக்கு எதிரான சவாலை
மும்பை வென்;கடே மைதானத்தில் எதிர்கொண்ட இலங்கை அதில் 112 ஓட்டங்களால் அபார
வெற்றியீட்டியது. இந்த வெற்றியானது நாளைய போட்டியில் இலங்கை அணி
வீரர்களுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதில் மறுபேச்சுக்கு இடமில்லை.
வீரகேசரி இணையம்
ஆர்.கே.எஸ்.